Thursday, September 08, 2005

நான் வாழ்வது என் செல்லம் உனக்காக..



சொல்வாயா...என் செல்லமே...

துயில் கலைந்திட்ட கண்கள்
இமைக்க மறந்த போது...
காதல் வலியால் கசங்கியதுஎன் இதயம்

உன் இளமை தீண்டியதால்
சிக்கித் தவிக்கின்றேன்செல்லமே..

அன்றுநெஞ்சில் அன்பைத் தெளித்து
காந்தக் கண்ணில் கருணைகாட்டி
இன்பத்தில் மிதக்க வைத்த என்செல்லமே..

இன்று....உன் உதடுகள் பேச மறுக்கின்றதே.

ஒரு மொழிதன்னும் கூற மாட்டாயா?என..
.என் செவிகள் காத்திருக்கின்றது

ஒரு வார்த்தை பேசிடு என் செல்லமே...
உன்னை மட்டும் நேசித்தேன் நேசித்தேன்

என்று பல முறை சொன்னாய்

உன் நேசம் உண்மைதனில்...
உன் சுவாசத்தை என்னருகில் கொண்டு வா...

காதலித்தது உண்மைதனில்
உன் உணர்வுகளை உணவாகக் கொண்டு வா.

.ம்......என்னும் ஏன்.....உனக்கு

மௌனம்...

போதும் என் செல்லமே.

.உன் கோபம் நம் காதல் அத்திவாரமாக

அமையட்டும்

உன் மௌனம் எனக்கு தைரியம்

கொடுக்கட்டும்

செல்லமே..என் கண்கள் உனை பார்க்க
என் செவிகள் உன் மொழி கேட்க
என் உதடு உனை வாழ்த்த
என் இதயம் உன் நினைவுகளைச் சுமக்க
என் உணர்வுகள் உனைஅள்ளி அணைக்க
நான் வாழ்வது என் செல்லம் உனக்காக..

புரிந்து கொள்வாயா...?

இல்லைபிரிந்து செல்வாயா...?
பதில்தான் சொல்வாயா...?

- ராகினி, germany

No comments: